Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, February 28, 2018

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடம் பீடாதிபதி இரங்கல்.


காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடம் பீடாதிபதி இரங்கல்.

காஞ்சி காமகோடி சங்கரமடத்தின் 69 ஆவது பீடாதிபதி, ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று 28.02.2018 காலை ஸ்ரீ காமட்சி அம்பாளின் திருவடி அடைந்தார்.

காஞ்சி சங்கரமடம் தென்னிந்தியாவின் மிகபெரிய சமஸ்தானம், இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் மேலைநாட்டினரும் வருகைபுரிந்து ஸ்வாமிகளின் ஆசிபெற்று வருகின்றனர். பல லட்ச கணக்கான பக்தர்களின் இதயத்தில் இடம் பிடித்தவரும், ஆன்மிகத்தின் வாயிலாகவும், வேதங்களின் மூலமாகவும், பல சேவைகளை செய்து வந்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தன்வந்திரி பீடத்தின் சார்பிலும், தன்வந்திரி குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்துகொள்கிறோம்.

அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவருடைய பக்தர்கள், பணியாளர்கள், சேவகர்கள் மன அமைதி பெறவும், இன்று காலை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் தன்வ்ந்திரி குடும்பத்தினர்கள், பக்தர்கள், அர்ச்சகர்கள், சேவார்த்திகள் மற்றும் பலர் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.  





யாகத் திருவிழா...


தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா
மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு
சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன்
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நான்கு தினங்களில் 36 விதமான யாகங்கள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 விதமான யாகங்கள் யாகத் திருவிழா நடைபெறுகின்றன.

மேற்கண்ட வைபவம் இன்று 28.02.2018 புதன் கிழமை காலை 7.00 மணி கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, பாக்ய சூக்த ஹோமம், கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம், கருட ஹோமம், லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, ஆகிய பூஜைகளும் ஹோமங்களும் இரண்டு காலமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நாளை 01.03.2018 வியாழக் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, தக்ஷ்ணாமூர்த்தி ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், ராகு கேது பிரீதி ஹோமம், நக்ஷத்திர ஹோமம், சரஸ்வதி ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், லக்ஷ்மி வராஹ ஹோமம், அஷ்ட லக்ஷ்மி யாகம், காயத்ரீ தேவி ஹோமம், சத்யநாராயண ஹோமம், காமதேனு ஹோமம், சதுர்வேத உபச்சாரம்,  கலச புறப்பாடு, 36 தேவதகளுக்கு சிற்றப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படுகிறது.
மேலும் மதியம் 3.00 மனியளவில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலச திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




Tuesday, February 27, 2018

யாகத் திருவிழா


தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா.
மூன்று நாட்கள் 36 ஹோமங்கள் துவங்கியது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 விதமான யாகங்கள் யாகத் திருவிழா நடைபெறுகின்றன.

மேற்கண்ட வைபவம் நேற்று 26.02.2018 திங்கட் கிழமை மாலை 6.00 மணியளவில் மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, சர்வ தேவதா ஆக்வாண பூஜை, கோலக்ஷ்மி பூஜை, தீப லக்ஷ்மி பூஜை, யாகசாலை பிரவேசம், மஹா சங்கல்பம், கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், சதுர்வேத உபச்சாரம் ஆகிய விசேஷ பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து இன்று 27.02.2018 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, நவக்கிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம், ஆயுஷ் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், காளி யாகம், சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், மண்ய சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ஸ்ரீ அன்னபூரணி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, ஆகிய் பூஜைகளும் ஹோமங்களும் இரண்டு காலமாக நடைபெற்றது.
மேலும் செவ்வாய் கிழமை பூசம் நட்சத்திரத்தில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகள் அகல பெண்களின் தாயாகவும் வைத்திய ஈஸ்வரியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்களகௌரி ஹோமத்துடன் மாதுளம் பழம் சாறு கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்வாமிகள் திருக்கரங்களால் பக்தர்களுக்கு ஹோம பிரசாததுடன் கஷாயம் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த யாகத்தில் ஸ்ரீ வடபாதி சித்தர், தொழிலதிபர் Dr.J.லட்சுமணன், துர்காபவன் உடமையாளர் திரு. உதயசங்கர், ஸ்ரீபெரும்புதூர் இராமானுஜம், விழுப்புரம் சம்பத் குமார், குடியாத்தம் விஜயகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

இதனை தொடர்ந்து நாளை 28.02.2018 புதன் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம், கருட ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் மூன்றாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

மாலை 4.30 மணி முதல் லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் நான்காம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற பல்வேறு பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Sunday, February 18, 2018

சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு நான்கு தினங்களில் 36 விதமான யாகங்கள்


தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா


மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டுசகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன்
முப்பத்து முக்கோடி தேவர்களுக்குநான்கு தினங்களில் 36 விதமான யாகங்கள் நடைபெறுகின்றன.


நாள் : 26.02.2018 திங்கட் கிழமை மாலை முதல்
01.03.2018 வியாழன் மாலை வரை.

ன்றைக்கு வாழ்ந்து வருகிற உலகில் எது நமக்கு மிக அவசியம்?

சொந்த வீடு, கை நிறைய சம்பளம், வங்கியில் சேமிப்பு, ஜாலியான வாழ்க்கை இவை எல்லாம் இருந்தால் நமக்கு சந்தோஷம்தான். ஆனால், இவற்றை விட மிகவும் முக்கியமான ஒன்று இருந்தால்தான், மேலே சொல்லியதை ஆனந்தமாக அனுபவிக்க முடியும்.

அந்த முக்கியமான ஒன்று என்ன?  அதுதான் உடல் ஆரோக்கியம்!

கஷ்டப்பட்டுக் கை நிறைய சம்பாதிக்கலாம். வங்கியில் சேமிக்கலாம். சொந்தமாக வீடு வாங்கலாம். ஆனால், இவற்றை அனுபவிக்க தேக ஆரோக்கியம் என்கிற செல்வம் முக்கியம் அல்லவா? இத்தகைய அரிய செல்வத்தை நமக்கு வழங்குபவர்தான் காக்கும் கடவுளும், நோய் தீர்க்கும் பெருமானும் ஆன அருள்மிகு தன்வந்திரி பகவான்.

இந்தியாவிலேயே ஏன், உலகத்திலேயே என்றுகூடச் சொல்லலாம். தன்வந்திரி பகவானுக்குத் தனிக் கோயில் என்றால், அது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அருகே கீழ்ப்புதுப்பேட்டையில் பெற்றோருக்காக அமைந்துள்ளது.

இது கோயில் அல்ல! தேக நலனை வாரி வழங்கும் ‘ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்’!
ஆம்! இப்படித்தான் இதற்கு நாமகரணம் சூட்டி இருக்கிறார் இதன் ஸ்தாபகரான கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.
75 சந்நிதிகள், 468 சித்தர்கள், கோசாலை, மூலிகை வனம், அன்னதானக் கூடம்,24 மணி நேர அணையா யாகசாலை, தியான மண்டபம், ஆயுர்வேத மருத்துவ மனை, கலை அரங்கம், என்று பிரமாண்டமான பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பீடத்தில், சிறப்பு ஹோமங்கள் செய்து தங்கள் வாழ்வை வளம் பெருக்குவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.

திருமணத் தடையா, கல்வியில் கவனக்குறைவா, ஞாபக மறதியா, குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவா, பணி அமையவில்லையா, குழந்தைப் பேறு தாமதமா, வெளிநாடு வாய்ப்பு தள்ளிப் போகிறதா இவை அனைத்துக்கும் ஒரு நல்ல  நிரந்தரமான தீர்வு, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆத்மார்த்தமான ஒரு ஹோமத்தின் மூலம் கிடைக்கிறது. இவை மட்டும்தானா?

நோய் நொடி இல்லாமல் வாழவும், தீராத வியாதிகளைத் துரத்தவும் விசேஷ ஹோமங்கள் உண்டு. உபநயனம், சஷ்டியப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற ஸாந்தி ஹோமங்களையும் இங்கே நடத்த பக்தர்கள் தேடி வருகிறார்கள்.

வியாபாரத்தில் போட்டி, தொழிலில் பொறாமை, பில்லி சூன்யம் தொந்தரவு இப்படி நிவாரணம் தேடி இங்கு தினமும் வரும் வியாபாரிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் நிறைய உண்டு.

கடந்த 13 ஆண்டுகளாக தினசரி தன்வந்திரி ஹோமம், சுதர்சன் ஹோமம், லக்ஷ்மி ஹோமம் நடைபெற்று வருகின்ற தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்களாக 1000 சண்டி யாகம், 365 நாள் 365 யாகம், 55 நாட்கள் 135 யாகங்கள், 24 மணி நேரம் 27 யாகங்கள், 74 குண்டங்களில் 74 சிவாச்சாரியர்கள் பங்கேற்ற 74 பைரவர் ஹோமம், 108 குண்டங்களில் 108 சிவாச்சாரியர்கள் பங்கேற்ற 108 கணபதி யாகம், 468 குண்டங்களில் 468 சாதுக்கள் பங்கேற்ற 468 சித்தர்கள் யாகம், 24 மணி நேரம் நடந்த அன்ன யக்ஞம், 10 லட்சம் ஏலக்காய் ஹோமம், 1,32,000 கொழுக்கட்டை ஹோமம், 1,10,000 லட்டு ஹோமம், 15 ஆயிரம் வாழைப்பழ ஹோமம், 10 ஆயிரம் மாதுளம்பழ ஹோமம், ஒரு லட்சம் நெல்லிக்கனி ஹோமம், 2014 பூசணிக்காய் ஹோமம், 6 ஆயிரம் கிலோ மிளகாய் ஹோமம், 11 ஆயிரம் வில்வப் பழம் ஹோமம் போன்ற பல்வேறு விதமான ஹோமங்கள் வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்று உள்ளது.

அந்த வரிசையில் பக்தர்கள் சகல சௌபாக்யங்கள் பெற 10,000 தடவை  பாக்ய சூக்த ஜபம் செய்து 1000 ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 வகையான யாகங்கள் விசேஷ திரவியங்களைகொண்டு பல்வேறு தரப்பினர்கள் முன்னிலையில் நான்கு நாட்கள் சிறப்பு ஹோமங்களாக வருகிற 26.02.2018 திங்கள் கிழமை மாலை 6.00 மணி முதல் 01.03.2018 வியாழக் கிழமை இரவு 8.00 மணி வரை காலை மாலை இருவேலையும் மாசி மகம் பௌர்ணமியை முன்னிட்டு கீழ்கண்ட நிகழ்ச்சி நிழல்படி வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீவித்யா உபாசகர் பிரம்மஸ்ரீ M.ராமகிருஷ்ண சர்மா அவர்கள் தலைமையில் நான்கு நாட்கள் 16 வேத விற்பன்னர்கள் பங்கேற்று, யாகத் திருவிழாவாக நடைபெற உள்ளது.


நிகழ்ச்சி நிழல்

26.02.2018 திங்கள் கிழமை மாலை 6.00 மணியளவில் மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, சர்வ தேவதா ஆக்வாண பூஜை, கோலக்ஷ்மி பூஜை, தீப லக்ஷ்மி பூஜை, யாகசாலை பிரவேசம், மஹா சங்கல்பம், கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
27.02.2018 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, நவக்கிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், மங்கள கௌரிஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம், ஆயுஷ் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் முதல் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை காளி யாகம், சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், மண்ய சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ஸ்ரீ அன்னபூரணி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் இரண்டாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
28.02.2018 புதன் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம், கருட ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் மூன்றாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் நான்காம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
01.03.2018 வியாழக் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, தக்ஷ்ணாமூர்த்தி ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், ராகு கேது பிரீதி ஹோமம், நக்ஷத்திர ஹோமம், சரஸ்வதி ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் ஐந்தாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், லக்ஷ்மி வராஹ ஹோமம், அஷ்ட லக்ஷ்மி யாகம், காயத்ரீ தேவி ஹோமம், சத்யநாராயண ஹோமம், காமதேனு ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் ஆறாம் காலம் மஹாபூர்ணாஹூதி சதுர்வேத உபச்சாரம்,  7.00 மணிக்கு நடைபெற்று கலச புறப்பாடு, சகல தேவதா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். பக்தர்கள் அனைவரும் மேற்கண்ட வைபவத்தில் பங்கேற்று கைங்கர்யத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாளின் அருளுக்கு பாத்திரதாரர்கள் ஆகும்படி கேட்டுகொள்கிறோம்.

இங்ஙனம் தன்வந்திரி குடும்பத்தினர்.
தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,


Friday, February 16, 2018

Danvantri Peedam - Universal Peedam: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி விழா............

Danvantri Peedam - Universal Peedam: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி விழா............

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி விழா............


தன்வந்திரி பீடத்தில் நாளை
 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
182வது ஜெயந்தி விழா சிறப்பு பூஜை.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி நாளை 17.02.2018 சனிக் கிழமை மாசி மாதம் துவிதியை திதி முன்னிட்டு ஸ்ரீ ரமகிருஷ்ண பரமஹம்சர் ஜெயந்தி விழாவும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஆரோக்ய லக்ஷ்மி, மரகதாம்பிகை, மரகதேஸ்வரர், சத்யநாராயணர், கூர்ம லக்ஷ்மி நரசிம்மர் போன்ற பல்வேறு தெய்வங்கள் மட்டுமின்றி காஞ்சி மஹா பெரியவர், ராகவேந்திரர், மஹாவீரர், வள்ளலார், ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், மஹா அவதார பாபா, வீரபிரம்மங்காரு, குழந்தையானந்த ஸ்வாமிகள் போன்ற பல்வேறு மஹான்களையும், 468 சித்த புருஷர்களையும், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்து பிரதி வருடம் அவர்களுடைய ஜெயந்தி விழாவும், ஆராதனை விழாவும் சிறப்பாக நடத்தி வருகிறார். அந்த வகையில் நாளை இந்தியாவின் தலை சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவரும், வீரத்துறவி விவேகானந்தரின் குருவும் காளி உபாசகரும், ஸ்ரீ சாரதாதேவியின் அருள் பெற்றவரும், இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்று இல்லாமல் மனிதயினம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்த திரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் 182வது ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்று மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Wednesday, February 14, 2018

திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும்.........


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 14.02.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும் திருவோண ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது.










Tuesday, February 13, 2018

மஹா சிவராத்திரி 2018....


மஹா சிவராத்திரி

தன்வந்திரி பீடத்தில் இன்று 13.02.2018 செவ்வாய் கிழமை மஹா சிவராத்திரி மற்றும் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ர ஹோமமும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும், 468 சித்தர்கள் பூஜையும்  நடைபெற்றது.












Wednesday, February 7, 2018

திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும்..


நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 14.02.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். அன்னாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்தில்கொண்டு திருவோண ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் ஹோமங்கள் நடைபெறுகிறது.

வித விதமான வரங்களை அள்ளித்தரும் விஷ்ணுவின் திருத்தலமான ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் மகிழ்ச்சி, நீண்ட ஆயுள், முக்திபெறவும் நிலம் சம்பந்தமான வழக்கு, பரம்பரை சொத்து போன்ற அனைத்து பிரச்சனைகள் நீங்க எதிர்மறை சக்திகள் மற்றும் துர்ஸ்வப்னங்கள் விலகவும், வற்றாத செல்வவளம், தானியங்கள் மற்றும் தீர்க்க ஆரோக்கியம் தந்து காக்கும் கடவுளான தன்வந்திரி பகவான் உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு பெற மேற்கண்ட ஹோமம் நடைபெறுகிறது. தசாவதாரம் என்று அழைக்கப்படும் பத்து அவதாரங்களில் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கூர்மர், ஸ்ரீ வராஹர், ஸ்ரீ பரசுராமர் போன்ற அவதாரங்கள் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் திருவோண ஹோமத்தில் புருஷ ஸூக்த ஹோமத்திலும், பூஸூக்த ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்தில் கலந்துகொண்டு தைலப்பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203