Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, April 12, 2017

தன்வந்திரி பீடத்தில் சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகநலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி வருகிற14.04.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு  மகா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகம் நடைபெறுகிறது.
வருகிற தமிழ் புத்தாண்டில் அனைத்து மக்களும் நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், சிறக்கவும்.குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படவும் குழந்தைகள் முழு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல் கல்வி சேரவும். நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும்.மழை வேண்டியும் மதநல்லிணக்கம்,மனித நேயம் வளரவும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி சிறப்பு தன்வந்திரி ஹோமமும் ஸ்ரீ மகாலஷ்மி யாகமும் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தில் பக்தர்கள் பல்வேறு நன்மைகள் பெற பலவகையான மலர்கள்,பட்டு ஸ்திரம்,நெய் தேன்,வெண்கடுகு, வால்மிளகு,சீந்தல்கொடி,போன்ற 108 விதமான மூலிகைகளும் சேர்க்கப்பட உள்ளது.
மேலும் நல்லெண்ணை,கரும்புசாறு,மூலிகை தீர்த்தம்,நெல்லிக்காய் பொடி பால்,தயிர் இளநீர்,மஞ்சள், சந்தனம், மற்றும் துளசி தீர்த்தம்கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ள  மூலவர் தன்வந்திரிக்கும்  ஆரோக்ய லஷ்மிக்கும் சிறப்பு திருமஞ்சனமும்நடைபெற உள்ளது துளசி இதழ்களாலும் சிறப்பு அர்ச்சனை செய்து, பஞ்சதீபம் ஏற்றப்பட உள்ளது.
பக்தர்கள் அனைவரும் இந்த ஹோமத்தில் பங்கேற்று பலன்பெற வேண்டுகிறோம் இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment